'கீழடியில் புதிதாக ஒன்றும் கிடைக்கவில்லை' - புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன பேராசிரியர் சுப்பராயலு கருத்து

கோவையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் அண்மைக்கால அகாழாய்வுகள் குறித்த தேசியக் கருத்தரங்கில், கீழடி அகழாய்வு குறித்து புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் சுப்பராயலு முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.



Coimbatore: கோவை குமரகுரு கல்வி வளாகத்தில் தமிழ்நாட்டின் அண்மைக்கால அகாழாய்வுகள் குறித்த இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் இன்று துவங்கியது. நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம், வானவராயர் பவுண்டேசன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த கருத்தரங்கின் நோக்கம், தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அண்மைக்கால அகழாய்வுகளில் கிடைத்த வரலாற்றுச் சான்றுகளைப் பகிர்ந்து கொள்வதும், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், கொங்கல்நகர் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்விற்கு களப்பயணம் செய்வதும் ஆகும்.



கருத்தரங்கின் முதல் நாளில், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் சுப்பராயலு, குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர், நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குனர் ஜெகதீசன், தொல்லியல் துறை ஆளுமைகள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குனர் ஜெகதீசன் பேசுகையில், "அகழாய்வுகள் சம்பந்தமான ஆய்வறிக்கைகள் வருவதற்கு தாமதம் ஏற்படுகிற இந்த சூழலில், அந்தத் துறை சார்ந்த ஆளுமைகளை பேசவைத்து செய்திகளை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலேயே, இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருப்பதாக" தெரிவித்தார்.



புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் சுப்பராயலு தனது உரையில், கீழடி அகழாய்வு குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், "கீழடியில் வீடுகள் இருந்ததற்கான அமைப்புகள் கிடைக்கவில்லை. அது ஒரு தொழில் சார்ந்த இடமாக இருந்திருக்கலாம். தொல்பொருள்களைப் பொறுத்தவரை, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருட்களோடு ஒப்பிடுகையில் கீழடியில் புதிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. கீழடிக்கு என்ன சிறப்பு என்று புரியவில்லை" என்று தெரிவித்தார்.



கருத்தரங்கின் தொடர்ச்சியாக, பல்வேறு தலைப்புகளின் கீழ் அமர்வுகள் நடைபெற்றன. இதில் தொல்லியல் துறை சார்ந்த ஆளுமைகள் உரை நிகழ்த்தினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...