கோவை சுந்தராபுரம் காமராஜ் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
இந்நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகே அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை காமராஜ்நகர் பகுதியில் பிரதான சாலை அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி மருத்துவமனைக்கு மிக அருகில் டாஸ்மாக் கடை இருப்பதாக கூறி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மதுக்கடையால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் பயணிக்க வேண்டி இருப்பதாகவும், இந்த கடையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இதனயடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய வருவாய் துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
இந்நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகே அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை காமராஜ்நகர் பகுதியில் பிரதான சாலை அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி மருத்துவமனைக்கு மிக அருகில் டாஸ்மாக் கடை இருப்பதாக கூறி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மதுக்கடையால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் பயணிக்க வேண்டி இருப்பதாகவும், இந்த கடையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இதனயடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய வருவாய் துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.