கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தூய்மை பணியாளர்களுக்கான தாட்கோ திட்ட கடனுதவி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று (27.09.2024) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஆணையாளர் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கான நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.



தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ நல வாரிய அட்டை வழங்குதல், ESI, PF வசதிகள் பெறுவதற்கான விபரங்களை பதிவு செய்தல், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலமாக பள்ளியில் பயிலும் தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.3,500 உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.



மேலும், சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வருடம் ரூ.450 பிடித்தம் செய்து, ரூ.2.00 இலட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு கிடைக்க வழிவகை செய்தல், தூய்மைப்பணியாளர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க ஏற்பாடு செய்தல் போன்ற திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டை பெறுவதன் மூலமாக திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, கை, கால் இழத்தல், பார்வை இழப்பு மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார். அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை பெற்று பயன்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, செந்தில்குமரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ), கே.மகேஷ்வரி, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ராஜேந்திரன், முருகன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...