மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை உறுதியளித்ததால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மடத்துக்குளம் 13வது வார்டு கணேஷ்புரம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தற்பொழுது தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகம் கட்டி வருகின்றார். இதனால் அவசர தேவைக்காக அவசர ஊர்தி கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மடத்துக்குளம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடந்த மே 31 அன்று புகார் மனு வழங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.



இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை இன்று 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

எனினும், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடம் கிடைக்காதபட்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...