பத்மஸ்ரீ விருது பெற்ற 110 வயது தேக்கம்பட்டி பாப்பம்மாள் காலமானார்

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் 110 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். இயற்கை விவசாயத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர், அண்மையில் பெரியார் விருதும் பெற்றிருந்தார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 110 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவு காரணமாக இன்று இரவு 8:30 மணியளவில் காலமானார்.

விவசாயத்தின் மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்த பாப்பம்மாள் பாட்டி, தனது உயர்ந்த வயதிலும் தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இவரது விவசாய ஆர்வத்தைப் பாராட்டி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

விருது வழங்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட்டது.

வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, அண்மைக் காலமாக படுக்கையிலேயே இருந்து வந்த பாப்பம்மாள் பாட்டி இன்று இரவு காலமானார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாப்பம்மாள் பாட்டியின் மறைவு விவசாய சமூகத்திற்கும், இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கும் பேரிழப்பாக கருதப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...