ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் 22-வது liveSurge பயிலரங்கம்: சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு

கோவையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் கார்டியோதோராசிக் துறை சார்பில் 22-வது liveSurge வருடாந்திர பயிலரங்கம் நடைபெற்றது. ஜெர்மனி, இத்தாலி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறை சார்பில் 22-வது liveSurge வருடாந்திர பயிலரங்கம் இன்று துவங்கியது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கின் முதல் நாளில், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் துறைத்தலைவர் டாக்டர் முரளிதரன், கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறை சேர்மன் டாக்டர் சந்திரசேகர், ஜி.கே.என்.எம் மருத்துவமனை மருத்துவர்கள், இந்தியாவின் பிற மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.



இந்த பயிலரங்கில் ஜெர்மனி, இத்தாலி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், பல்வேறு அமர்வுகளில் இருதய அறுவை சிகிச்சை சம்பந்தமான தகவல்களை காணொளி காட்சிகள் மூலம் விளக்கியதோடு தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.



இருதய அறுவை சிகிச்சை துறையில் நிகழ்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புதிய நடைமுறைகள் குறித்தான தகவல்கள் வழங்கப்பட்டன.



ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறுகையில், "22-வது liveSurge பயிலரங்கம் கார்டியோதோராசிக் துறையில் உள்ள முக்கிய தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த பயிலரங்கம் பங்கேற்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும்" என்றார். மேலும், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் கார்டியோதோராசிக் துறை பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதாகவும், ஆண்டொன்றுக்கு 1800 ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாகவும் கூறினார்.



இந்த பயிலரங்கமானது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களை ஒன்றினைத்ததோடு, பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது. கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சை துறையில் தற்போதைய நிலையைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய மாற்றங்களுக்கு தயாராகவும் பங்கேற்பாளர்களுக்கு இந்த பயிலரங்கம் பெரிதும் உதவியது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...