ஈஷா யோகா மையத்தின் மீதான அவதூறுகளுக்கு எதிராக காவல் துறையில் புகார்

கோவையில், ஈஷா யோகா மையத்தின் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி, மையத்தின் தன்னார்வலர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். சமூக ஊடகங்களில் பரவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை எதிர்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மையத்தின் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.



செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ், "ஈஷா யோகா மையம் செய்யும் பல்வேறு நன்மையான வேலைகளுக்கும் தொண்டுகளுக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல காலங்களாக சிலர் பொய்யான அவதூறுகளை பரப்பி வருகின்றனர்" என்று தெரிவித்தார். மேலும், "அவர்களிடம் ஏதேனும் முகாந்திரம் இருந்தால் நீதிமன்றத்தையோ காவல்துறையையோ அணுகி தீர்வு கண்டிருக்கலாம்" என்றும் கூறினார்.

தினேஷ் மேலும் கூறுகையில், "ஒரு குழுவாக இணைந்து கொண்டு அவர்களுக்கு குழுவிற்கென்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அந்த குழுவில் இருக்கும் பல பேரின் பின்னணி பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்" என்றார். அவர்கள் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடுவதாகவும், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் எழுப்பப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், தீர்ப்பு வரும்பொழுது முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் தினேஷ் தெரிவித்தார்.

குறிப்பாக காமராஜ் என்பவர் சமீப காலமாக தொடர்ந்து ஈஷா மீது அவதூறு பரப்புவதாகவும், அவரது இரண்டு மகள்களே ஈஷாவில் தன்னார்வலர்களாக இருப்பதாகவும் தினேஷ் குறிப்பிட்டார். "காமராஜ் அவரது மகள்களை சந்தித்து இனிப்புகள் வழங்கி செல்கிறார். ஆனால் அதே சமயம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அவர்கள் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் எங்களிடம் உள்ளன" என்று தினேஷ் தெரிவித்தார்.

இறுதியாக, "ஈஷா மீது தற்போது குற்றம் சாட்டும் நபர்கள் எவரிடமும் எந்த ஒரு முகாந்திரமும் ஆதாரமும் இல்லை" என்று தினேஷ் வலியுறுத்தினார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...