போக்சோ வழக்கில் கைதான ஈஷா மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம் கேள்வி

கோவையில் ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, போக்சோ வழக்கில் கைதான ஈஷா மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காததற்கு விளக்கம் கோரியுள்ளது. வழக்கு விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவையில் ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ், பேராசிரியர் காமராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



ஈஷா யோகா மையத்தின் நடமாடும் மருத்துவ முகாமில் பணிபுரிந்த மருத்துவர் சரவண மூர்த்தி, அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக கடந்த 6ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கத்தினர் கேள்வி எழுப்பினர்.



சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசுகையில், "ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்யா யோஜனா திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, பெண் மாணவர்களை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் டாக்டர் சரவண மூர்த்தி எப்படி பள்ளிக்குள் சென்றார்? இது குறித்து சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்டவைகளிடம் கேள்வி எழுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது," என்றார்.

மேலும் அவர், "மருத்துவ முகாமிற்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் கிளினிக் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை. வழக்கு விசாரணை ஆரம்பித்ததும் விசாரணை அதிகாரி விடுமுறையில் சென்றுவிட்டார். வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈஷாவின் மீது ஏன் இந்த அனுதாபம்?" என்று கேள்வி எழுப்பினார்.

2021 ஆம் ஆண்டு கூட்டு பலாத்கார வழக்கிற்காக ஈஷா மீது கோவை பேரூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த எஃப்ஐஆர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பியூஸ் மனுஷ் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட பெண் புகாரை வாபஸ் பெற்றுவிட்டதாக கூறப்படுவதாகவும், ஆனால் சட்டத்தின் கீழ் பெண் புகாரை வாபஸ் பெற இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

காவல்துறையினர் மருத்துவர் மீதான வழக்கை மெத்தனமாக கையாள்வதாக குற்றம் சாட்டிய பியூஸ் மனுஷ், "இந்த வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் அது கோவைக்கு அவப்பெயர். இந்த வழக்கிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். வழக்கு விசாரணை முறையாக நடைபெற வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...