வால்பாறையில் கத்தி, அருவாளுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது

வால்பாறையில் கல்லூரி மாணவரை தாக்க முயன்று அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த இவர்கள் மாணவரிடம் பணம், செல்போனை பறித்துள்ளனர்.



கோவை: வால்பாறையில் கல்லூரி மாணவரை தாக்க முயன்று அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூவரை வால்பாறை காவல்துறையினர் கைது செய்தனர்.

வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரியின் மகன் வெற்றிவேல் (18) நேற்று இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (19), ஆறுமுகம் (25), ஆனந்தராஜ் (19) ஆகிய மூவரும் குடிபோதையில் கத்தி, அருவாளுடன் சென்று மிரட்டி அவரைத் தாக்கி, கையில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர்.

இது குறித்து வெற்றிவேல் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவல்துறையினர், மூவரையும் தேடிச் சென்றனர். முதலில் ஆறுமுகம் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர், ஏ1 எதிரியான ஹரிஹரன் போலீசார் தேடி வருவதை அறிந்து தேயிலைத் தோட்டத்தில் ஓடினார்.



அப்போது கையில் பலத்த காயமடைந்து கீழே விழுந்து கிடந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைப்பற்றி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...