மேட்டுப்பாளையம் நகர்மன்றக் கூட்டத்தில் பதற்றம்: திமுகவினர் தாக்குதலில் அதிமுக உறுப்பினர் படுகாயம்

மேட்டுப்பாளையம் நகர்மன்றக் கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் பதற்றம். அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட். திமுகவினர் தாக்குதலில் அதிமுக உறுப்பினர் குரு பிரசாத் படுகாயம். கோவை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் திடீரென தண்ணீர் குடிக்கும் டம்ளரை வீசி எறிந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒழுங்கு நடவடிக்கையாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 9 பேரை அடுத்த இரண்டு நகர்மன்றக் கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக நகராட்சித் தலைவர் மெஹரீபா பார்வின் அறிவித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 9 பேர் நகராட்சிக் கூட்ட அரங்கில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். நகராட்சி ஆணையாளர் மற்றும் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி இரவு 8 மணிக்கு உடன்பாடு ஏற்பட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் வெளியே வந்தனர்.

அப்போது நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்த திமுக நிர்வாகிகள் சிலர் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களைத் தாக்கினர்.



இந்தத் தாக்குதலில் அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் குரு பிரசாத் அவர்களுக்குக் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக குரு பிரசாத் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிமுக மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மருத்துவமனை வளாகத்தில் கூடினர்.

குரு பிரசாத்தின் உடல் நிலை மோசமடைந்ததால், உடனடியாக அவரை மருத்துவர்கள் உயர் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதலில் அவருக்குப் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...