உடுமலை திருப்பதி கோவிலில் இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.



கோவில் நுழைவாயில் பகுதியில் இருந்து நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து ஸ்ரீ வெங்கடேச பெருமாளை சாமி தரிசனம் மேற்கொண்டனர்.



இன்று காலை ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், புஷ்பம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். சாமி தரிசனத்துக்கு வந்த அனைத்து பொதுமக்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு வழிபாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்பதி கோவில் நிர்வாகம் முன்னதாகவே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...