பத்மஸ்ரீ பாப்பம்மாள் உடலுக்கு அமைச்சர் முத்துசாமி அஞ்சலி - திமுகவிற்கு பேரிழப்பு

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் உடலுக்கு அமைச்சர் முத்துசாமி அஞ்சலி செலுத்தினார். திமுகவின் மூத்த உறுப்பினரான பாப்பம்மாளின் இழப்பு கட்சிக்கு பேரிழப்பு என அமைச்சர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் வசித்து வந்த பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.



திமுகவின் மூத்த உறுப்பினரான பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக அமைச்சர் முத்துசாமி அவர்கள் இன்று நேரில் வருகை புரிந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் முதலமைச்சர் சார்பிலும், அமைச்சர் பெருமக்கள் சார்பிலும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார். அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "பாப்பம்மாள் அவர்கள் 1951 ஆண்டு முதல் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவர். குறிப்பாக ஹிந்தி திணிப்பு போராட்டத்தில் பெரும்பங்காற்றினார்" என்று நினைவு கூர்ந்தார்.

"பாப்பம்மாளின் இழப்பு திமுகவிற்கு பேரிழப்பு" எனக் கூறிய அமைச்சர், "இந்த பகுதியில் அவர் விட்டுச் சென்ற திமுகவின் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்" என உறுதியளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...