கோவை ராமநாதபுரத்தில் பைக் திருட்டு: இருவர் கைது

கோவை ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்ட குற்றவாளிகள் வாகன சோதனையின் போது பிடிபட்டனர்.



கோவை: கோவை நகரில் அதிக விலை கொண்ட இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியில் இரு நபர்கள் ஒரு வாகனத்தில் வந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.



செப்டம்பர் 27 அன்று ராமநாதபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த நவ்புல் ரஹ்மான் மற்றும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது சப்வான் என தெரியவந்தது.

மேலும், நவ்புல் ரஹ்மான் காலையில் பிரியாணி கடையில் வேலை பார்த்துவிட்டு இரவில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் இவர்களிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...