விஸ்வ ஹிந்து பரிஷத் மதுக்கரை பிரகண்ட கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுக்கரையில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் செட்டிபாளையம் ஜெபக்கூடம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் நடவடிக்கை கோரப்பட்டது.


Coimbatore: விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மதுக்கரை பிரகண்ட கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் பிரகண்ட தலைவர் C.V. பழனிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில சமுதாய நல்லிணக்க பொறுப்பாளர் முனைவர் சாரதா, அமர்நாத் சிவலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் C.N. பரமசிவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



முதல் தீர்மானத்தில், திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதத்தில் மாமிசக் கொழுப்பு கலந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்தனர். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவது தீர்மானத்தில், கோவை செட்டிபாளையம் ஜெயம் நகரில் அனுமதியின்றி செயல்படும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தின் மீது மாநில அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.



கூட்டத்தின் நிறைவில், பிரகண்ட செயலாளர் ராஜேஷ்குமார் மகிழ்வுரையாற்றினார். இக்கூட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...