சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் சாலையில் நடந்து வந்த காட்டு யானை பாகுபலி: சுதாரித்து செயல்பட்ட பொதுமக்கள்

சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் பாகுபலி என்ற காட்டு யானை சாலையில் நடந்து வந்தது. பொதுமக்கள் சுதாரித்து செயல்பட்டு, வாகனங்களை நிறுத்தி, யானையை பாதுகாப்பாக காட்டுப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களால் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று நடமாடி வருகிறது. இந்த யானை பொதுவாக இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி, வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே நடமாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பாகுபலி யானை சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு போன்ற பகுதிகளில் நடமாடி வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு சிறுமுகையில் இருந்து லிங்கபுரம் செல்லும் பிரதான சாலையில் லிங்காபுரம் கிராமத்தில் பாகுபலி யானை தனியாக நடந்து வருவதை அப்பகுதி கிராம மக்கள் கண்டுள்ளனர்.



யானை நடமாடுவதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு, செல்போன் மூலம் தகவல் பரிமாறி, எதிரெதிரே வரும் வாகனங்களை நிறுத்தச் சொல்லி போக்குவரத்தை தடை செய்தனர். இதனைத் தொடர்ந்து, காட்டு யானை சாலையில் அமைதியாக நடந்து வந்து, தனது வழக்கமான வலசை பாதையாக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பகுதியில் நுழைந்து ஆடர் வனப்பகுதிக்குள் சென்றது.

பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் சுயாதீனமான செயல்பாட்டால், யானை வருவதை முன்கூட்டியே கண்டறிந்து தகவல் பரிமாறியதால், எந்தவித அசம்பாவிதமும் இன்றி நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. இத்தகைய விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு மனித-விலங்கு மோதல்களைத் தவிர்க்க உதவும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...