அன்னூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை: பெண் ஆசிரியை போக்சோவில் கைது

கோவை மாவட்டம் அன்னூரில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


சௌந்தர்யா என்ற பெண் ஆசிரியை, அந்த பள்ளியில் சமூக அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவிகளிடம் அநாகரிகமாகவும் அத்துமீறியும் நடந்து கொண்டதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரிடம் கடந்த ஒரு வருடமாக ஓரினச்சேர்க்கை மற்றும் தவறான தொடுதல் போன்ற முறையில் அத்துமீறியதாக தெரிய வந்துள்ளது.


இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தார். உடனடியாக செயல்பட்ட பெற்றோர், அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இந்த புகார் மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து அத்துமீறிய பள்ளி ஆசிரியை சௌந்தர்யா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


நாளைய சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் புனிதத்தை கெடுக்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்புக்கு பெண்ணே அச்சுறுத்தலாக மாறிய இந்த சம்பவம் அன்னூர் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...