கோவையில் இரண்டு நாள் சர்வதேச கட்டுமான கண்காட்சி தொடக்கம்

கோவை கொடிசியாவில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச கட்டுமான கண்காட்சி தொடங்கியது. 120 ஸ்டால்களுடன் கூடிய இந்த கண்காட்சியில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.



Coimbatore: கோவை கொடிசியாவில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச கட்டுமான கண்காட்சி இன்று தொடங்கியது. கோவை மண்டலம் கட்டிட பொறியாளர் சங்கமும் மற்றும் கட்டுமானம் மனை தொழில் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் இந்த கண்காட்சியை காவேரி குரூப் ஆப் கம்பெனி நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர், லட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் முத்துராமன், ராமு இண்டஸ்ட்ரீஸ் ராமு ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் கட்டுமான பணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.



கட்டிட உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச பதிவு மற்றும் புதுப்பித்தல் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா ஏ ஹாலில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று (28ம் தேதி) மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் 120 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இலவசமாக வந்து பங்கு பெறலாம்.

இந்த நிகழ்வில் கோசீனா கான் பெஸ்ட் தலைவர் வி பி பழனிச்சாமி, க்ரிக் கான் பெஸ்ட் தலைவர் ராஜதுரை, செயலாளர் செந்தில்நாதன், எஸ் கே இளங்கோவன், பொருளாளர் சுந்தர்ராஜன், எம் செந்தில் குமார் மற்றும் கோசீனா, க்ரிக் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...