பாஜக உறுப்பினர் சேர்க்கை: 72 லட்சம் பேர் இணைந்துள்ளதாக கே.பி.ராமலிங்கம் தகவல்

கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் 72 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.



கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தலைவர் கே.பி.ராமலிங்கம், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.



அப்போது அவர் கூறியதாவது: "செப்டம்பர் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேசியமும் தெய்வீகமும் தான் பாஜகவின் கொள்கை. இந்தக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 72 லட்சம் பேர் உறுப்பினராகச் சேர்ந்துள்ளனர்."

"தொடர்ந்து நேர்மையான ஒரு இயக்கம் பாரதத்தை ஆள வேண்டும். அப்படி நேர்மையாக ஆளும் கட்சியாக பாஜக உள்ளது. அதனால் தான் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்," என்று கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

மேலும் அவர், "மொத்தமாக தமிழக அமைச்சர்கள் என்பது திருடர்கள் கூட்டம். புதிய திருடன் வந்தால் என்ன, பழைய திருடன் வந்தால் என்ன, எல்லாம் திருடன் தான். புரோக்கர் நல்லபடியாக யார் கமிஷன் பெற்று சபரீசன், உதயநிதிக்கு கொடுப்பார்கள் என்பது தான் செந்தில் பாலாஜி. கமிஷன் பெற்று தருவதில் வல்லவர்," என்றும் குற்றம் சாட்டினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...