கோவை ஆலாந்துறை அருகே வீட்டில் 22 சவரன் நகைகள், ரூ.5.32 லட்சம் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை ஆலாந்துறை அருகே கள்ளிப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.5.32 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை ஆலாந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.5.32 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (27) என்பவர் கடந்த 27 ஆம் தேதி தனது குடும்பத்துடன் அவிநாசியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து வீட்டைப் பார்த்தபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.5.32 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

உடனடியாக இது குறித்து ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், தனது அடையாளத்தை மறைக்க மங்கி கேப் மற்றும் கையுறைகளை அணிந்துகொண்டு ஒரு மர்ம நபர் சாவகாசமாக கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையடித்த மர்ம நபரைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Newsletter

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...