நெடுவாசல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய சென்னை மற்றும் கோவையைச் சேர்ந்த இளைஞர் மாணவர்கள் மீது பொய்வழக்குப் புனைந்து சிறையிலடைத்த தமிழக காவல் துறையை கண்டித்து அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நெடுவாசல் மக்களின் மனிதகுலம் காக்கும் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் மதிய மாநில அரசு மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுமாறும், விவசாயம் மற்றும் விவசாயிகளுக்காகப் போராடியவர்களின் மீதான பொய் வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டுமெனவும், உரிமைக்காக போராடும் மக்களை ஒடுக்காமல் போராடும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நெடுவாசல் மக்களின் மனிதகுலம் காக்கும் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் மதிய மாநில அரசு மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுமாறும், விவசாயம் மற்றும் விவசாயிகளுக்காகப் போராடியவர்களின் மீதான பொய் வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டுமெனவும், உரிமைக்காக போராடும் மக்களை ஒடுக்காமல் போராடும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர்.