காந்தி ஜெயந்தி: கோவையில் நாளை இறைச்சிக் கடைகள் மூடல் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று கோவை மாநகராட்சி எல்லைக்குள் இறைச்சிக் கடைகள் மற்றும் அறுவைக்கூடங்கள் மூடப்படும். மீறினால் அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2, 2024 அன்று மாநகராட்சி எல்லைக்குள் இயங்கும் அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். மேலும், உக்கடம், சக்திரோடு மற்றும் போத்தனூர் பகுதிகளில் உள்ள ஆடு மற்றும் மாடு அறுவைக்கூடங்களும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகளுக்கு எதிராக மாநகராட்சி சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரித்துள்ளார். இதில் அபராதம் விதித்தல், முதல் எச்சரிக்கை வழங்குதல் மற்றும் உரிமம் ரத்து செய்தல் ஆகிய நடவடிக்கைகள் அடங்கும்.

காந்தி ஜெயந்தி தினத்தன்று விலங்குகளை வதை செய்வதற்கும், இறைச்சி விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து இறைச்சி வியாபாரிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...