தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவர் மூன்று வெண்கலப் பதக்கங்கள் வெற்றி

பிலிப்பைன்ஸின் மனிலாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி மாணவர் பிரணவ் அருண்பிரசாத் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றார். 11 நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குமரகுரு லிபரல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பிரணவ் அருண்பிரசாத், பிலிப்பைன்ஸின் மனிலா நகரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். செப்டம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில், பிரணவ் அருண்பிரசாத் இந்திய அணி சார்பில் ஜூனியர் A பிரிவில் (17-19 வயது) பங்கேற்றார்.

இப்போட்டியில் இந்தியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சீனா, ஹாங்காங், மங்கோலியா, சிங்கப்பூர், வியட்நாம், உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பிரணவ் அருண்பிரசாத் தனது வயது பிரிவில் 500, 1000 மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் முறையே மூன்றாம் இடம் பிடித்து மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.



குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே வீரர் பிரணவ் அருண்பிரசாத் ஆவார். கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரணவ் அருண்பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், போட்டிகளில் பங்கேற்க உண்டான தொகையான 1,95,000 ரூபாயை தமிழக அரசின் சார்பில் நேரில் வழங்கி வாழ்த்தினார்.



போட்டிகளில் வெற்றி பெற்ற பிரணவ் அருண்பிரசாத், அக்டோபர் 1 ஆம் தேதி காலை 8:00 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பி வருகிறார். இந்த சாதனை மூலம் கோவை மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் பிரணவ் அருண்பிரசாத்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...