தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவர் மூன்று வெண்கலப் பதக்கங்கள் வெற்றி

பிலிப்பைன்ஸின் மனிலாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி மாணவர் பிரணவ் அருண்பிரசாத் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றார். 11 நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குமரகுரு லிபரல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பிரணவ் அருண்பிரசாத், பிலிப்பைன்ஸின் மனிலா நகரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். செப்டம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில், பிரணவ் அருண்பிரசாத் இந்திய அணி சார்பில் ஜூனியர் A பிரிவில் (17-19 வயது) பங்கேற்றார்.

இப்போட்டியில் இந்தியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சீனா, ஹாங்காங், மங்கோலியா, சிங்கப்பூர், வியட்நாம், உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பிரணவ் அருண்பிரசாத் தனது வயது பிரிவில் 500, 1000 மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் முறையே மூன்றாம் இடம் பிடித்து மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.



குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே வீரர் பிரணவ் அருண்பிரசாத் ஆவார். கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரணவ் அருண்பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், போட்டிகளில் பங்கேற்க உண்டான தொகையான 1,95,000 ரூபாயை தமிழக அரசின் சார்பில் நேரில் வழங்கி வாழ்த்தினார்.



போட்டிகளில் வெற்றி பெற்ற பிரணவ் அருண்பிரசாத், அக்டோபர் 1 ஆம் தேதி காலை 8:00 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பி வருகிறார். இந்த சாதனை மூலம் கோவை மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் பிரணவ் அருண்பிரசாத்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...