கோவை, மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி கிராமப்புற ஊராட்சியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த கிராமப்புற பொதுமக்கள் மதுக்கரை ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், மலுமிச்சம்பட்டி கிராம ஊராட்சியில் இருக்கும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளால் ஊர்மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதாகவும், கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் சில பெண்கள் எனப் பலர் மதுவிற்கு அடிமையாகிவிட்டதாகவும். அதுமட்டுமல்லாமல், அருகாமையில் உள்ள கிராமத்து மக்கள் பலரையும் குடிநோயளிகளாகவும் ஆக்கிவிட்டதாகவும்.
எனவே, இந்த மதுபானக்கடைகளால் கிராமத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதகவும், இந்த மதுக்கடைகளால் பெண்கள் மீதான வன்முறை, சாலை விபத்துக்கள் என மக்களுக்குப் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், இனியும் இந்த கடைகளால் கிராம மக்கள் பாதிப்படையக் கூடாது. எனவே ஊராட்சியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என கூறப்படிருந்தது.
அந்த மனுவில், மலுமிச்சம்பட்டி கிராம ஊராட்சியில் இருக்கும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளால் ஊர்மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதாகவும், கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் சில பெண்கள் எனப் பலர் மதுவிற்கு அடிமையாகிவிட்டதாகவும். அதுமட்டுமல்லாமல், அருகாமையில் உள்ள கிராமத்து மக்கள் பலரையும் குடிநோயளிகளாகவும் ஆக்கிவிட்டதாகவும்.
எனவே, இந்த மதுபானக்கடைகளால் கிராமத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதகவும், இந்த மதுக்கடைகளால் பெண்கள் மீதான வன்முறை, சாலை விபத்துக்கள் என மக்களுக்குப் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், இனியும் இந்த கடைகளால் கிராம மக்கள் பாதிப்படையக் கூடாது. எனவே ஊராட்சியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என கூறப்படிருந்தது.