காந்தி ஜெயந்தி: உடுமலையில் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை - நகராட்சி ஆணையர் அறிவிப்பு

உடுமலை நகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி கடைகளுக்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் ப.பாலமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், "காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மற்றும் ஆடுவதைக்கூடம் செயல்பட தடைவிதிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகளை வதைக்கவோ அல்லது இறைச்சிகளை விற்பனை செய்யவோ கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "உத்தரவை மீறி செயல்பட்டால் இறைச்சியை பறிமுதல் செய்து அழிப்பதுடன் உரிமம் இரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

இந்த அறிவிப்பு உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடை உரிமையாளர்களுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...