உடுமலை வனப்பகுதியில் கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு: வனத்துறை விசாரணை தீவிரம்

உடுமலை அருகே வனப்பகுதியில் 20 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வனத்துறையினர் செடிகளை அழித்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனப்பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் வசித்து வருகின்றன. வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நீராதாரங்களை ஆய்வு செய்யவும் வனத்துறையினர் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தளி பிரிவுக்கு உட்பட்ட குழிப்பட்டி சுற்று பகுதியில் வனவர் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிக்குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழவந்தான் மலை சரக பகுதியில் 2 மீட்டர் நீளமுள்ள 20 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக கஞ்சா செடிகள் வேருடன் பிடுங்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன. மேலும் ஆய்வக பகுப்பாய்விற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து உடுமலை வனச்சரகத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளூர் வாசிகளா அல்லது மர்ம நபர்களா என்பதை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வனப்பகுதியில் கஞ்சா பயிரிடுதல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவடப்பு வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...