நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடை கால விழாவை முன்னிட்டு தோட்டக்கலை சார்பில் ஒன்பதாவது காய்கறி கண்காட்சி தொடங்கியது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசுமுதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில், பார்வையாளர்களை கவரும் வண்ணமாக 1500 கிலோ எடையுள்ள பல வண்ணங்களை கொண்ட குட மிளகாய்களை கொண்டு 25 அடி நீளம், 12 அடி உயரம், 6 அடி அகலம் உள்ள காய்கறி கப்பல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 500கிலோ எடையுள்ள மஞ்சள் மற்றும் பச்சை சுகினியை கொண்டு 10அடி உயர கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் பல மாவட்டங்களில் இருந்து பல்வேறு அரங்கங்கள் அமைப்பட்டு அதில் கரடி, முயல், மான், மயில் போன்ற உருவ அமைப்புகள் காய்கறிகளால் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த காய்கறிக் கண்காட்சியில் சுமார் 25000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இக்காட்சியை கண்டு ரசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்விழாவில், பார்வையாளர்களை கவரும் வண்ணமாக 1500 கிலோ எடையுள்ள பல வண்ணங்களை கொண்ட குட மிளகாய்களை கொண்டு 25 அடி நீளம், 12 அடி உயரம், 6 அடி அகலம் உள்ள காய்கறி கப்பல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 500கிலோ எடையுள்ள மஞ்சள் மற்றும் பச்சை சுகினியை கொண்டு 10அடி உயர கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் பல மாவட்டங்களில் இருந்து பல்வேறு அரங்கங்கள் அமைப்பட்டு அதில் கரடி, முயல், மான், மயில் போன்ற உருவ அமைப்புகள் காய்கறிகளால் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த காய்கறிக் கண்காட்சியில் சுமார் 25000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இக்காட்சியை கண்டு ரசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
