கோவையில் விவசாயிகள் 100 நாள் தொடர் போராட்டம் தொடக்கம்: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை கோரிக்கை

கோவை சூலூரில் விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி 100 நாள் தொடர் போராட்டம் தொடங்கியுள்ளனர். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.


கோவை: கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் 65 சதவீத விவசாயிகள் தென்னை விவசாயத்தை நம்பியும் அதனை சார்ந்த தொழில்களை நம்பியும் விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் விவசாயிகள் 65 சதவீதத்திற்கும் மேலாக உள்ளனர்.

தேங்காய் எண்ணெயை தமிழக அரசால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என கால் நூற்றாண்டு காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை எந்த அரசும் செயல்படுத்தவில்லை என விவசாயிகள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் 100 நாட்கள் 100 ரேஷன் கடை முன்பாக போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் நேற்று (அக்டோபர் 1) சூலூரில் தொடங்கியுள்ளது.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...