கோவையில் விவசாயிகள் 100 நாள் தொடர் போராட்டம் தொடக்கம்: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை கோரிக்கை

கோவை சூலூரில் விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி 100 நாள் தொடர் போராட்டம் தொடங்கியுள்ளனர். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.


கோவை: கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் 65 சதவீத விவசாயிகள் தென்னை விவசாயத்தை நம்பியும் அதனை சார்ந்த தொழில்களை நம்பியும் விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் விவசாயிகள் 65 சதவீதத்திற்கும் மேலாக உள்ளனர்.

தேங்காய் எண்ணெயை தமிழக அரசால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என கால் நூற்றாண்டு காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை எந்த அரசும் செயல்படுத்தவில்லை என விவசாயிகள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் 100 நாட்கள் 100 ரேஷன் கடை முன்பாக போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் நேற்று (அக்டோபர் 1) சூலூரில் தொடங்கியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...