விபத்துக்களுக்கு வழி வகுக்கிறதா ‘பஸ்-பே?

கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதற்கட்டமாக கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 7 இடங்களை தேர்வு செய்து போலீசார் அங்கு ‘பஸ்-பே’ அமைத்தனர். நகர பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில், ‘பஸ்-பே’க்களால் விபத்துகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருக்கும் நகர பேருந்துகள் திடீரென இடதுபுறம் இருக்கும் ‘பஸ்-பே’ நோக்கி திரும்பும் போது பேருந்தின் பின்புறம் வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிறு சிறு விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கோவை, ஜி.என்.மில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘பஸ்-பே’வில் இது போன்ற விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. 

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த அமைக்கப்பட ‘பஸ்-பே’க்களால் தற்போது சிறு சிறு விபத்துகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. பொதுமக்கள் சிறிய அளவிலான காயங்கள் அல்லது, வாகனத்தில் கீறல் மட்டும் ஏற்படுவதால் புகார்களை அளிக்க தயங்கி வருகின்றனர். 

இந்த பிரச்சனையில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வை கொண்டுவர வேண்டும். ‘பஸ்-பே’ தொடங்குவதற்கு முன் சற்று தொலைவில் இருந்து பேருந்துகள் மட்டும் செல்லுமாறு சிறிய கற்களை வைத்து பாதை அமைத்தால் இந்த விபத்துக்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது’ என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...