வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் உள்ள பயணியர் நிழற்கூரை சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பயணியர் நிழற்கூரை இடியும் நிலையில் உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். வால்பாறையில் உள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் மாதா கோவில் சந்திப்பில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த நிழற்கூரை தற்போது பாழடைந்து காணப்படுகிறது.
நிழற்கூரையின் பக்கவாட்டு சுவர்களும், மேற்கூரையும் பெரிதும் சேதமடைந்துள்ளன. இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் இந்த நிழற்கூரையை பயன்படுத்துவதில்லை. மேலும், நிழற்கூரை பள்ளத்தில் அமைந்திருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு வேறு இடமில்லாத நிலை நிலவுகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த நிழற்கூரையை இரவு நேரங்களில் சிலர் திறந்தவெளி மதுபான விடுதியாக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மாதா கோவில் சந்திப்பில் புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நிழற்கூரையின் பக்கவாட்டு சுவர்களும், மேற்கூரையும் பெரிதும் சேதமடைந்துள்ளன. இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் இந்த நிழற்கூரையை பயன்படுத்துவதில்லை. மேலும், நிழற்கூரை பள்ளத்தில் அமைந்திருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு வேறு இடமில்லாத நிலை நிலவுகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த நிழற்கூரையை இரவு நேரங்களில் சிலர் திறந்தவெளி மதுபான விடுதியாக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மாதா கோவில் சந்திப்பில் புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.