உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு: பென்ஷன் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்

உடுமலையில் நடைபெற்ற இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில், பென்ஷன் தொழிலாளர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமான தொழிலாளர் பென்சன் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது.



மாநில தொழிற்சங்க அமைப்பாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடு, உடுமலை குட்டைத்தடல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கியது.



மாநாட்டில் மாநில செயலாளர் பாஸ்கரன் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் பாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் பாஸ்கரன், பென்ஷன் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை ரூ.3000 வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.25,000 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தொழிலாளர்களுக்கு இலவச வீடு கட்டும் திட்டம் மற்றும் இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கணக்கம்பாளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த மாநாட்டில் திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில குழு உறுப்பினர் அப்பாஸ், தொழிற்சங்க நிர்வாகி பால் நாராயணன், தொழிற்சங்க அமைப்பாளர் சுந்தர்ராஜ், மகளிர் அமைப்பாளர் வைதேகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...