திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கோட்டை மருதூரில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டை மருதூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டை மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் வடிவு சிவசாமி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குனர் மலர்கொடி மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் மற்றும் பஞ்சாயத்து தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து அறுபதுக்கு மேற்பட்ட பொதுமக்கள், சாலை வசதி, கலைஞர் உதவித்தொகை, ஊனமுற்றோருக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரிடம் வழங்கினர்.

இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குனர் மலர்கொடி மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் மற்றும் பஞ்சாயத்து தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து அறுபதுக்கு மேற்பட்ட பொதுமக்கள், சாலை வசதி, கலைஞர் உதவித்தொகை, ஊனமுற்றோருக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரிடம் வழங்கினர்.
இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.