கோவை கவுண்டம்பாளையத்தில் ஸ்ரீ ஆதிமங்கல விநாயகர் கோவிலில் 15ஆம் ஆண்டு விழா கோலாகலம்

கோவை கவுண்டம்பாளையம் ஸ்ரீ ஆதிமங்கல விநாயகர் கோவிலில் 15ஆம் ஆண்டு விழா மற்றும் மகாளய அமாவாசை விழா கோலாகலமாக நடைபெற்றது. 51 குடும்பங்கள் பங்கேற்ற சிவ கலச மகா சிவ வேள்வி, திருக்கல்யாணம், திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் சிவா நகர் சிவாலயம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிமங்கல விநாயகர் திருக்கோவிலில் 15 ஆம் ஆண்டு விழா மற்றும் மகாளய அமாவாசை விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 51 குடும்பத்தினர் கலந்து கொண்ட 51 சிவ கலச மகா சிவ வேள்வி நடைபெற்றது.

விழா நேற்று முதல் தேதி இடத்தூய்மை வழிபாட்டுடன் தொடங்கியது. வள்ளி கும்மி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை 5 மணி அளவில் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. அதன் பின்னர் 51 சிவ கலச மகா சிவ வேள்வி நிகழ்ச்சி தொடங்கியது.



வேள்வியில் பங்கேற்ற 51 குடும்பத்தினர் அரிசி, நல்லெண்ணெய், வேள்வி பொருட்கள், பூமாலை, உதிரிப்பூக்கள், நெய், வஸ்திர வகைகள், அபிஷேக பொருட்கள், தேங்காய், பழ வகைகள், எலுமிச்சை பழம், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்த பூஜைகளை பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சின்னவேடம்பட்டி இராமானந்த குமரகுருபர சுவாமிகள், செஞ்சேரிமலை முத்து சிவராம சுவாமி அடிகளார் ஆகியோர் நடத்தி வைத்தனர். பின்னர் அருள்மிகு மங்களநாயகி உடன்மர் மங்களீஸ்வரர் திருமேனிக்கு புனித நீராட்டு விழாவும், தொடர்ந்து ஆதிமங்கள விநாயகர், வீரவரத ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, திருச்சுற்று தெய்வங்களுக்கு புனித நீராட்டு விழாவும் நடைபெற்றது.

அதன் பின்னர் அலங்கார வழிபாடு, ஸ்ரீ மங்களாம்பிகை உடன்மர் மங்கலீஸ்வரர் பெருமான் திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றன. காலை முதல் மாலை வரை அன்னதானம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு, பிரதோஷ வழிபாட்டு குழு, பௌர்ணமி மகளிர் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கவுண்டம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...