கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தி: இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் MLA பி.ஆர்.ஜி.அருண்குமார் முகாமை தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பெண்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தினர். துடியலூர் கார் ஸ்டேண்டு அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் வி.ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார்.



சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தி ஐ பவுண்டேசன் மருத்துவர்களான டாக்டர் அலிசா, டாக்டர் ஜெகநாதன் மற்றும் செவிலியர்கள் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளை உறுப்பினர்களான ராஜன், செல்வி பானுபிரியா, தமிழரசி, பார்த்தசாரதி, வெங்கடேசன், அருண்குமார், சுதாகர் ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அறக்கட்டளை செயலாளர் கண்ணதாசன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...