கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தி: இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் MLA பி.ஆர்.ஜி.அருண்குமார் முகாமை தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பெண்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தினர். துடியலூர் கார் ஸ்டேண்டு அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் வி.ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார்.



சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தி ஐ பவுண்டேசன் மருத்துவர்களான டாக்டர் அலிசா, டாக்டர் ஜெகநாதன் மற்றும் செவிலியர்கள் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளை உறுப்பினர்களான ராஜன், செல்வி பானுபிரியா, தமிழரசி, பார்த்தசாரதி, வெங்கடேசன், அருண்குமார், சுதாகர் ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அறக்கட்டளை செயலாளர் கண்ணதாசன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...