கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தி: இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் MLA பி.ஆர்.ஜி.அருண்குமார் முகாமை தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோவை துடியலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பெண்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தினர். துடியலூர் கார் ஸ்டேண்டு அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் வி.ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார்.



சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தி ஐ பவுண்டேசன் மருத்துவர்களான டாக்டர் அலிசா, டாக்டர் ஜெகநாதன் மற்றும் செவிலியர்கள் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளை உறுப்பினர்களான ராஜன், செல்வி பானுபிரியா, தமிழரசி, பார்த்தசாரதி, வெங்கடேசன், அருண்குமார், சுதாகர் ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அறக்கட்டளை செயலாளர் கண்ணதாசன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...