சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்த தன்னார்வலர்கள்



கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்களிடையே கோவை மாநகர காவல்துறையினர்  பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இவர்களுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், கல்லூரி மாணவர்களும் சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை கோவை பிரதான சாலையான லட்சுமி மில்ஸ் சிக்கனலில் போக்குவரத்து காவல்துறையினர் உதவியுடன் எஸ்.என்.ஆர் கல்லூரி மாணவர்கள், சாலை நண்பர்கள், 'எஜூதர்மா' அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் 'ஷாப்த்ரூ' செயலியின் நிறுவனர்களும் கலந்து கொண்டு  வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். 



மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்தும், காரில் செல்பவர்களுக்கு சீட் பெல்ட் அணிவது குறித்தும் மற்றும் மது அருந்திவிட்டு பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சாலையில் நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...