கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 5 பேர் கைது, 756 மதுபாட்டில்கள் பறிமுதல்

கோவையில் அக்டோபர் 2 அன்று நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் மூன்று வெவ்வேறு இடங்களில் 756 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (அக்டோபர் 2) நடந்தது.

கோவை பகுதிகளில் சட்டவிரோத மதுபானம் விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்போது, கோபாலபுரம் டாஸ்மாக் கடை அருகே 380 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட தேனியை சேர்ந்த சூர்யா (25) மற்றும் திருப்பூர் பெருமாநல்லூரை சேர்ந்த பூமிநாதன் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், மாக்கினாம்பட்டியில் தனிப்பிரிவு போலீசார் மற்றும் கிழக்கு போலீசார் ரோந்து பணியின்போது, நேருநகரில் மது விற்ற கமலம் (65) மற்றும் செல்வம் (49) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 262 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.7,000 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கோலார்பட்டியில் மது விற்ற காளிமுத்து (37) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 114 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தம் 756 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...