கிணத்துக்கடவில் வாழைக்கன்று வாங்க மானியம் - தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

கிணத்துக்கடவு வட்டாரத்தில் தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிட வாழைக்கன்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு ரூ.10,000 மானியம் அளிக்கப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.


கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் விவசாயத்தை மேம்படுத்த அரசு பல மானிய திட்டங்களை வழங்கி வருகிறது. இதில், தோட்டக்கலைத்துறை சார்பில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் வாயிலாக, தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிடுவதற்கு, வாழைக்கன்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், தென்னையில் வாழை ஊடுபயிர் செய்ய, 30 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு, வாழைக்கன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு, ஒரு ஹெக்டேர் மட்டுமே வாழை கன்று மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, 80 சதவீதமும், பிற கிராமங்களுக்கு 20 சதவீதமும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கதளி மற்றும் நேந்திரன் என இரண்டு வாழைகன்றுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கன்றுகள் பெற ஆர்வமுள்ள விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி இன்று (அக்.3) வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...