திருப்பூரில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி குமரனின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், மேயர் உள்ளிட்டோர் குமரனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வாரிசுதாரர்கள் சிறப்பு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி குமரனின் 120வது பிறந்தநாள் விழா இன்று அரசு மரியாதையுடன் கொண்டாடப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் தியாகி குமரனின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வின் போது, தியாகி குமரனின் வாரிசுதாரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு கோரிக்கை மனுக்களை வழங்கினர். அவற்றில், தியாகி குமரனின் பிறந்தநாளை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும், தியாகி குமரனுக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தியாகி குமரனுக்கு தங்கள் மரியாதையை செலுத்தினர். இந்த நிகழ்வு தியாகி குமரனின் தியாகத்தையும், சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் அமைந்தது.