கோவை வெள்ளியங்கிரி மலை பகுதியில் அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம், பூண்டி அடுத்து மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை. மலையின் அடிவாரம் முதல் ஏழு மலைகளைக் கடந்து சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட ஆண்டுதோறும் பக்தர்கள் படையெடுத்து வருவர். மேலும், கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாகவும் வெள்ளியங்கிரி மலை உள்ளது.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) திருவாரூரைச் சேர்ந்த ஷ்யாம் (50) என்பவர் வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலையில் சென்றுகொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை (நேற்று) நள்ளிரவில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வனத்துறை சோதனை சாவடி அருகே அமர்ந்திருந்த வயதான ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஒரேநாளில் அடுத்தடுத்து உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆலாந்துறை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...