கோவை மாவட்டம், பூண்டி அடுத்து மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை. மலையின் அடிவாரம் முதல் ஏழு மலைகளைக் கடந்து சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட ஆண்டுதோறும் பக்தர்கள் படையெடுத்து வருவர். மேலும், கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாகவும் வெள்ளியங்கிரி மலை உள்ளது.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) திருவாரூரைச் சேர்ந்த ஷ்யாம் (50) என்பவர் வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலையில் சென்றுகொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை (நேற்று) நள்ளிரவில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வனத்துறை சோதனை சாவடி அருகே அமர்ந்திருந்த வயதான ஒருவர் திடீரென உயிரிழந்தார்.
வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஒரேநாளில் அடுத்தடுத்து உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆலாந்துறை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) திருவாரூரைச் சேர்ந்த ஷ்யாம் (50) என்பவர் வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலையில் சென்றுகொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை (நேற்று) நள்ளிரவில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வனத்துறை சோதனை சாவடி அருகே அமர்ந்திருந்த வயதான ஒருவர் திடீரென உயிரிழந்தார்.
வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஒரேநாளில் அடுத்தடுத்து உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆலாந்துறை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.