பொள்ளாச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: பிஏபி கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பிஏபி கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தினர். நெல் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், வட்டாட்சியர் பட்டு ராஜா, பிஏபி திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு திட்ட குழு தலைவர் செந்தில், முன்னோடி விவசாயிகள் பட்டீஸ்வரன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். திருமூர்த்தி அணை பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோரின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனைமலை பகுதிகளில் விரைவில் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும், நெல் கொள்முதலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், காட்டுப்பன்றிகளை தடுக்க வேண்டும், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும், அம்மை நோய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.



ஆனைமலை பழைய ஆயக்கட்டு காரப்பட்டி கால்வாய் பகுதிகளில் குடிநீர் திட்டங்களுக்காகவும், தனியார் திட்டங்களுக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லும்போது சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. கேரளாவில் உள்ளது போன்று தமிழக அரசும் நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா உறுதியளித்தார். குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு விவசாயி பத்மநாபன் சார்பாக நீரா பானம் இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...