அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். மருத்துவத்துறை, இளைஞர்களின் வாழ்க்கை முறை, அரசியல்வாதிகளின் பொறுப்புகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மருத்துவத்துறை நாட்டில் மிக முக்கியமான துறையாகப் பார்க்கப்படுவதாகக் கூறினார். மருத்துவத்துறையில் உள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றும், ஆதாயம் தேடாமல் ஆத்மார்த்தமாக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கியுள்ளதாகவும், நவீன மருத்துவ தொழில்நுட்பம் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு கூறினார். மேலும், இந்தியாவில் நோயால் இறப்பவர்களில் 27 சதவீதம் இதய நோயால் ஏற்படுவதாகவும், இதைத் தவிர்க்க அதிகப்படியான விழிப்புணர்வு தேவை என்றும் வலியுறுத்தினார்.

இளைஞர்கள் முந்தைய தலைமுறையின் வாழ்க்கை முறைகளைப் பார்க்க வேண்டும் என்றும், மேற்கத்திய கலாச்சார நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்திய கலாச்சார வாழ்க்கைப் பழக்கங்களை பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

செல்போன் பயன்பாடு குறித்தும் வெங்கையா நாயுடு எச்சரித்தார். செல்போனை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் அது ஆபத்தில் கொண்டுபோய் சேர்க்கும் என்றும், குழந்தைகள் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அடிமையாகும்போது அவர்களின் வாழ்க்கை பாழாகிறது என்றும் கூறினார்.

இஸ்ரேல்-ஈரான் போரால் தெற்காசிய நாடுகளில் தேவையற்ற குழப்பங்களும் பதற்றமும் உருவாகியுள்ளதாகவும், இது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

இறுதியாக, அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக கட்சி தாவலில் ஈடுபடுவது நாட்டுக்கு நல்லதல்ல என்றும், அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...