பொள்ளாச்சி அருகே முறையற்ற மனநல காப்பகத்திற்கு சீல் - 39 பேர் மீட்பு

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் அனுமதியின்றி இயங்கிய மனநல காப்பகத்தை அதிகாரிகள் மூடினர். 39 நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட மையத்திற்கு மாற்றப்பட்டனர். மோசமான சுகாதார நிலைமை கண்டறியப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் உள்ள சென்றாம் பாளையத்தில் முறையான அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் மனநல காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நடவடிக்கையின் போது, 39 நபர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மனநல காப்பக மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாதி உத்தரவின் பேரில், மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரமோகன், மற்றும் மனநல மருத்துவர் டாக்டர் கிருத்திகா ஆகியோர் இந்த காப்பகத்தை ஆய்வு செய்தனர்.



ஆய்வின் போது, அதிகாரிகள் பல குறைபாடுகளை கண்டறிந்தனர். ஒரே அறையில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். சிலருக்கு காலில் இரும்பு விலங்குகள் மாட்டப்பட்டிருந்தன. கழிப்பிடங்கள் மிகவும் மோசமான நிலையில், தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்தன.

மேலும், இந்த காப்பகம் கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வித அதிகாரப்பூர்வ அனுமதியும் இன்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த தகவல் உடனடியாக மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது.

கலெக்டரின் உத்தரவின் பேரில், காப்பகத்தில் இருந்த 30 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் உள்பட 39 பேர் அரசு அங்கீகரிக்கப்பட்ட மனநலக் காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் இந்த முறைகேடான காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...