சகோதரத்துவக் கோப்பைக்கான கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் கோவை மற்றும் தஞ்சாவூர் அணிகள் வெற்றி!


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)-வின் விளையாட்டு பிரிவான டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (TFSC) சார்பாக கோவையில் 'சகோதரத்துவக் கோப்பை 2017' எனும் தலைப்பில் மாபெரும் கால்பந்து மற்றும் கைப்பந்து  போட்டிகள் மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் குனியமுத்தூர் நூர்சேட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்புவிருந்தினராக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 



பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; 'சகோதரத்துவக் கோப்பை 2017' என்னும் இந்த விளையாட்டின் மூலம் அனைவரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினர். விளையாட்டின் மீது உங்களுக்கு எந்த அளவு ஆர்வம் உள்ளதை போன்று உங்கள் வாழ்விலும் ஆர்வம் காட்ட வேண்டும். விளையாட்டில் உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அதைவிட அவர்கள் மீது நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். இந்த சகோதரத்துவ போட்டியின் மூலம் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருப்பது போல் வாழ்க்கையிலும் அனைவரும் இதுபோன்றே சகாதரத்துவத்துடன் இருந்து சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.



இதில், தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து  50 அணிகள் போட்டியில் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தம் ரொக்கமாக ரூபாய் 38,000 வழங்கப்பட்டது. கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 10,000 கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 8,000 மற்றும் கோப்பைகள் சிறப்பு விருந்தினர் வழங்கினார். இரண்டாம் பரிசாக ரூபாய் 5,000. மூன்றாம் பரிசாக ரூபாய் 3,000 மற்றும் நான்காம் பரிசாக ரூபாய் 2,000 வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், என்.எஸ் குரூப் நிறுவனத்தின் தலைவர் கமாலுதீன், நூர்சேட் மேல்நிலைப்பள்ளி செயலாளர் இம்ரான்கான், ஜாமத்தே ஹி இஸ்லாமி ஹிந்த் தலைவர் சையத் இப்ராஹிம், ஜாமத்தே ஹி இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம், தமிழக டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் மற்றும் டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஷேய்க் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...