கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீஸ் திடீர் சோதனை

கோவை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். சில அறைகளில் போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம், சரவணம்பட்டி, அத்திப்பாளையம் பகுதிகளில் செயல்படும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் வாடகை வீடுகளில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையில் கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீஸ் குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டனர். கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா, விடுதிகளில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதே இந்த சோதனையின் நோக்கமாகும்.



விடுதிகளில் தங்க விரும்பாத மாணவர்கள் தனியாக வாடகை வீடுகளில் தங்கி வரும் நிலையில், அத்தகைய வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, மாணவர்கள் தங்கியிருக்கும் சில அறைகளில் உயர ரக போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர் விடுதிகளிலும் தொடர்ந்து இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...