கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீஸ் திடீர் சோதனை

கோவை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். சில அறைகளில் போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம், சரவணம்பட்டி, அத்திப்பாளையம் பகுதிகளில் செயல்படும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் வாடகை வீடுகளில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையில் கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீஸ் குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டனர். கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா, விடுதிகளில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதே இந்த சோதனையின் நோக்கமாகும்.



விடுதிகளில் தங்க விரும்பாத மாணவர்கள் தனியாக வாடகை வீடுகளில் தங்கி வரும் நிலையில், அத்தகைய வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, மாணவர்கள் தங்கியிருக்கும் சில அறைகளில் உயர ரக போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர் விடுதிகளிலும் தொடர்ந்து இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...