கோவை 27வது வார்டில் அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூட்டம்: கோரிக்கைகள் கேட்டறிந்த திமுக செயலாளர் நா. கார்த்திக்

கோவை பீளமேடு 27வது வார்டில் உள்ள ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக செயலாளர் நா. கார்த்திக் கலந்துகொண்டு குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.


கோவை: கோவை பீளமேடு வார்டு எண் 27-ல் உள்ள "ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்பு" வளாகத்தில் அக்டோபர் 5 அன்று "ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூட்டம்" நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா. கார்த்திக் கலந்து கொண்டார். அப்போது குடியிருப்போர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தனர். தார்ச்சாலை சீரமைப்பு, குப்பை மேலாண்மை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.

குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்த நா. கார்த்திக், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் பீளமேடு பகுதி-1 திமுக செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன், 27வது வட்டக் கழக துணைச் செயலாளர் சாந்தி நகர் அ. செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி ரமேஷ் குமார், வட்டக் கழகப் பொருளாளர் அங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், திமுக கழக மூத்த முன்னோடிகளான மில் ரவி, கிருஷ்ணமூர்த்தி, புருஷோத்தமன், கங்குவார் சீனு, மதிவாணன் மற்றும் பல திமுக கழக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...