உடுமலை அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி பெயர் கல்வெட்டில் புறக்கணிப்பு: முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு கண்டனம்

உடுமலையில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி பெயர் கல்வெட்டில் இடம்பெறாததால் சர்ச்சை. முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி பெயர் கல்வெட்டில் இடம்பெறாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம், தலைவர்கள் பூங்கா, நீரோட்டம் பூங்கா, அசோகா ஸ்தோபி சந்திப்பு ஆகியவை பராமரிக்கப்பட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் அமைச்சர் கயல்விழியின் பெயர் அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் இடம்பெறவில்லை. இது அமைச்சரின் ஆதரவாளர்களையும் திமுகவினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரம் உடுமலை, தாராபுரம், சென்னை போன்ற பல்வேறு இடங்களில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் சாதிக்பாட்ஷா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், "அரசு விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் பெயர், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் பத்மநாபன் பெயர் உள்ள நிலையில் தற்போதைய அமைச்சர் கயல்விழி பெயர் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

மேலும் அவர், "கல்வெட்டு திறப்பு விழாவின் போது அமைச்சர் சாமிநாதன் கவனிக்கவில்லையா? இல்லை முன்கூட்டியே கல்வெட்டு படம் காட்டவில்லையா? இல்லை அமைச்சருக்கு தெரிந்து தான் இந்த தவறு நடந்துள்ளதா என தெரியவில்லை. சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட திராவிட மாடல் திமுக இயக்கத்தில் ஒரு பட்டியலினை அமைச்சரின் பெயரை திட்டமிட்டு புறக்கணிப்பு செய்தது ஒட்டுமொத்த மக்களின் கோபத்தை கிளறி உள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சாதிக்பாட்ஷா வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...