உடுமலையில் நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி: 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மானுப்பட்டியில் வனஉயிரின வார விழாவின் ஒரு பகுதியாக நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 கி.மீ தூரம் மிதிவண்டியில் பயணித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மானுப்பட்டி பகுதியில் வனஉயிரின வார விழாவின் ஒரு பகுதியாக நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் தேவேந்தர குமார் மீனா ஐ.ஃப்.எஸ். அவர்களின் உத்தரவின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலைப்பேட்டை வனச்சரகம், திருப்பூர் வனக்கோட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் ஆரன்யா அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலும், வனவர் நிமல் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.



எண்ணம் போல் வாழ்கை அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் மற்றும் ஆர்.ஜி.எம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.



ஆர்.ஜி.எம் மேல்நிலை பள்ளி மற்றும் அமராவதி சைனிக் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மிதிவண்டி பேரணியில் கலந்துகொண்டனர்.



மிதிவண்டி பேரணி மானுப்பட்டியில் இருந்து ஏழுமலையன் கோவில் பிரிவு வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.



பின்னர் ஏழுமலையான் கோவில் பிரிவில் மாணவ மாணவிகளுக்கு நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் வனத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கையெழுத்து பிரச்சாரமும் நடைபெற்றது. வனத்துறை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உடனிருந்து நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...