உடுமலையில் நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி: 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மானுப்பட்டியில் வனஉயிரின வார விழாவின் ஒரு பகுதியாக நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 கி.மீ தூரம் மிதிவண்டியில் பயணித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மானுப்பட்டி பகுதியில் வனஉயிரின வார விழாவின் ஒரு பகுதியாக நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் தேவேந்தர குமார் மீனா ஐ.ஃப்.எஸ். அவர்களின் உத்தரவின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலைப்பேட்டை வனச்சரகம், திருப்பூர் வனக்கோட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் ஆரன்யா அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலும், வனவர் நிமல் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.



எண்ணம் போல் வாழ்கை அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் மற்றும் ஆர்.ஜி.எம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.



ஆர்.ஜி.எம் மேல்நிலை பள்ளி மற்றும் அமராவதி சைனிக் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மிதிவண்டி பேரணியில் கலந்துகொண்டனர்.



மிதிவண்டி பேரணி மானுப்பட்டியில் இருந்து ஏழுமலையன் கோவில் பிரிவு வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.



பின்னர் ஏழுமலையான் கோவில் பிரிவில் மாணவ மாணவிகளுக்கு நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் வனத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கையெழுத்து பிரச்சாரமும் நடைபெற்றது. வனத்துறை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உடனிருந்து நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கினர்.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...