உடுமலையில் நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி: 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மானுப்பட்டியில் வனஉயிரின வார விழாவின் ஒரு பகுதியாக நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 கி.மீ தூரம் மிதிவண்டியில் பயணித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மானுப்பட்டி பகுதியில் வனஉயிரின வார விழாவின் ஒரு பகுதியாக நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் தேவேந்தர குமார் மீனா ஐ.ஃப்.எஸ். அவர்களின் உத்தரவின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலைப்பேட்டை வனச்சரகம், திருப்பூர் வனக்கோட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் ஆரன்யா அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலும், வனவர் நிமல் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.



எண்ணம் போல் வாழ்கை அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் மற்றும் ஆர்.ஜி.எம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.



ஆர்.ஜி.எம் மேல்நிலை பள்ளி மற்றும் அமராவதி சைனிக் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மிதிவண்டி பேரணியில் கலந்துகொண்டனர்.



மிதிவண்டி பேரணி மானுப்பட்டியில் இருந்து ஏழுமலையன் கோவில் பிரிவு வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.



பின்னர் ஏழுமலையான் கோவில் பிரிவில் மாணவ மாணவிகளுக்கு நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் வனத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கையெழுத்து பிரச்சாரமும் நடைபெற்றது. வனத்துறை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உடனிருந்து நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கினர்.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...