உச்சநீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, கோவை சிவானந்தா காலனியில் RSS தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த தொண்டர்கள் பங்கேற்றனர்.
கோவை: கோவை சிவானந்தா காலனியில் இன்று நடைபெற்ற ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) அணிவகுப்பு ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த தொண்டர்கள் பங்கேற்றனர்.

உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

RSS-ன் ஸ்தாபன தினமான விஜயதசமியன்று ஆண்டுதோறும் நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு RSS-ன் நூற்றாண்டு துவக்கத்தை முன்னிட்டு கோவையில், வடவள்ளி மற்றும் சிவானந்தா காலனி ஆகிய இரு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஊர்வலம், அப்பகுதியில் துவங்கி முக்கிய சாலைகள் வழியாக நல்லாம்பாளையம் சாலை அம்ருதா பள்ளி மைதானத்தில் நிறைவுபெற்றது. அணிவகுப்பு ஊர்வலத்தைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு எவ்வித சம்பவங்களும் இன்றி அமைதியாக நிறைவடைந்தது.
உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
RSS-ன் ஸ்தாபன தினமான விஜயதசமியன்று ஆண்டுதோறும் நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு RSS-ன் நூற்றாண்டு துவக்கத்தை முன்னிட்டு கோவையில், வடவள்ளி மற்றும் சிவானந்தா காலனி ஆகிய இரு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஊர்வலம், அப்பகுதியில் துவங்கி முக்கிய சாலைகள் வழியாக நல்லாம்பாளையம் சாலை அம்ருதா பள்ளி மைதானத்தில் நிறைவுபெற்றது. அணிவகுப்பு ஊர்வலத்தைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு எவ்வித சம்பவங்களும் இன்றி அமைதியாக நிறைவடைந்தது.