கோவையில் 'காட்மா' தொழிற்பேட்டை: அடுத்த வாரம் நிலம் ஒதுக்கீடு தொடக்கம்

கோவை கீரணத்தம் பகுதியில் 'காட்மா இன்டஸ்ரியல் பார்க் பப்ளிக் லிமிடெட்' வளாகத்தில் நிலம் ஒதுக்கீடு பணிகள் அடுத்த வாரம் தொடங்குகிறது. இத்திட்டம் கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோரின் கூட்டு முயற்சியாகும்.


Coimbatore: கோவை மாவட்டம் கீரணத்தம் பகுதியில் கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் குடிசை தொழில்முனைவோர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'காட்மா இன்டஸ்ரியல் பார்க் பப்ளிக் லிமிடெட்' வளாகத்தில் நிலம் ஒதுக்கீடு பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படுகிறது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் நகர்புற பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. நகர விரிவாக்கம், வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில், கோவையை தலைமையகமாக கொண்டு செயல்படும் 'காட்மா' தொழில் அமைப்பு சார்பில், கோவையில் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.

இது குறித்து 'காட்மா' தலைவர் சிவக்குமார் கூறுகையில், "எங்கள் தொழில் அமைப்பில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 5,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குடிசை தொழில் பிரிவை சேர்ந்தவர்கள். நகர விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க எங்கள் தொழில் அமைப்பு சார்பில், கோவையில் தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்யப்பட்டது," என்றார்.

'காட்மா இன்டஸ்ரியல் பார்க் பப்ளிக் லிமிடெட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொழிற்பேட்டை கோவை கீரணத்தம் பகுதியில் 2.19 ஏக்கரில் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 12 கோடி ஆகும். மொத்தம் 27 உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் 2 சென்ட் முதல் அதிகபட்சமாக 7 சென்ட் வரை நிலம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

"தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த வாரம் முதல் நிலம் கிரயம் செய்து பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் தொடங்க உள்ளோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்," என்று சிவக்குமார் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "கீரணத்தம் தொழிற்பேட்டை திட்டத்தை தொடர்ந்து அடுத்தகட்டமாக கோவில்பாளையம் மற்றும் அரசூர் பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைப்பது தொடர்பாக உறுப்பினர்களுடன் பேசி வருகிறோம். முதல் திட்டத்தை போல் அவ்விரு திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...